திருக்குறள்

விக்கிமேற்கோள் இலிருந்து

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.

நூல் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • அரசியல் ஞானம், சமூகஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன.[1]
  • குறள் ஒரு அறிவுக்களஞ்சியம், பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல்.[1] -ஈ. வெ. இராமசாமி
  • ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, மறுப்பு திருக்குறள் ஒன்றே! எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள்.[1]
  • திருக்குறள் ஒன்று போதும், இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க.[1] -ஈ. வெ. இராமசாமி
  • திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.[2] -ஈ. வெ. இராமசாமி
  • ஆல்பர்ட் சுவைட்சருக்கு பகவத் கீதையைப் பிடிக்காது. ஏனென்றால் அது அறநெறியை வலியுறுத்தவில்லை. ஆனால் குறளோ அன்பு, கடமை என இரண்டையும் வலியுறுத்தியது. அவர் திருக்குறளில் பைபிலின் நீதிகளைக் கண்டார். எனவே திருக்குறளை மிகப் போற்றினார். -ஜார்ஜ் எல். ஹார்ட்[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
  2. 2.0 2.1 "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
  3. Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=திருக்குறள்&oldid=38170" இலிருந்து மீள்விக்கப்பட்டது